
தொடுவானம் தொடுகின்ற நேரம்
30
61
SERIES•
Ongoing
About
இது ஒரு ஆன்டி ஹீரோ சப்ஜெக்ட் கதை. ஆமாங்க இது ஒரு ஒப்பந்த காதல் கதை. அஞ்சனாவுக்கும் ஆதி சக்ரவர்த்தனுக்கும் காதல், மோதல், ஊடல், கூடல் அனைத்தையும் இதில் சொல்லி இருக்கிறேன். சந்தர்ப்ப வசத்தால் அஞ்சனா ஆதியின் கையால் தாலியை கழுத்தில் வாங்க நேர்கிறது. இருவரும் மோதலுடன் ஆரம்பித்து பின்பு நட்பாக மாறி காதலாக மாறுகிறது. விதிவசத்தால் இல்லை இல்லை வில்லியின் வசத்தால் அவள் அவனை விட்டு பிரியவும் நேர்கிறது. பின்பு மீண்டும் இருவரும் இணைந்தார்களா இல்லையா என்பதை கதையின் போக்கில் சொல்லி இருக்கிறேன்.
ஸர்வ மங்கள மாங்கல்யே சிவே ஸர்வார்த்த ஸாதகே ஸரண்யே த்ரயம்பகே கௌரி நாராயணி நமோஸ்துதே!! கெட்டி மேளம் கெட்டி மேளம்............... "ஏய் என்னைடி உன்னைய பாத்திரம் கழுவ சொன்னா நீ என்னடானா இங்க நின்னுக்கிட்டு பகல் கனவு கண்டுட்டு இருக்க" "இதோ இப்ப பண்ணிறேன் சித்தி" "எப்ப பாரு இதையவே சொல்லு. நானும் உன்னைய பாத்துட்டே தான் இருக்கேன் உன் நடவடிக்கை கொஞ்சம் கூட சரியில்லை." "இல்ல சித்தி நான் நல்லாத்தான் இருக்கேன் உங்களுக்குத்தான் அப்படி தோணுதுன்னு நினைக்குறேன்" என கூறினாள் அஞ்சனா. கூறிய மறுநிமிடம் அவளது கன்னம்...
Loading...
Enjoyed this?
Sign in to clap