
மேகதூதம்
162
1.3k
SERIES•
ஆரியன் கண் மலர சூரியகாந்தி பூ மலர அதிகாலை பிறந்தது உன் சந்நிதியும் தான் திறக்க ஏரெழில் கொண்டு சின்ன பேடுரையும் சிவமைந்தா விழித்தெழுவாய் சிறுவாபுரி வாழ் பாலசுப்ரமண்யா விழித்தெழுவாய்! பகலவன் வரவைக் கண்டு பனித்துளிகள் பறந்தோட பறவைகள் யாவும் கூட்டைவிட்டு வெளியேற சேவலின் குரல் கேட்டும் சேவற்கொடியோனே உறங்கலாமோ? விழித்தெழுவாய் சிறுவாபுரி வாழ் பாலசுப்ரமண்யா விழித்தெழுவாய்! பசுவும் தன் சிசுவுடன் பாசமோடு வந்து நிற்க 'மா ' என்று குரல் கொடுத்து மால்மருகா உனை எழுப்ப மலையத்துவஜன் மகளின் மைந்தனான திருக்குமரா...
Loading...
Enjoyed this?
Sign in to clap