
அதிரல் சுகந்தமே!!
201
2.2k
EBOOK•
Completed#lovestory
About
"தப்பு பொண்ணு பிடிக்கலைன்னு சொன்னா ஒதுங்கி போகணும். அதை விட்டுட்டு அந்த பொண்ணோட வீட்டுக்கு போயி, தப்பு தப்பா அவங்க பொண்ணை பத்தி சொல்லி அந்த பொண்ணோட எதிர்காலத்தை பாழாக்க கூடாது புரியுதா!"
அது எப்படி சார்! அப்போ என் காதல் அது உண்மையான காதல் தான, நான் ஏன் விட்டுக் கொடுக்கணும் என்று அந்த பொடியன் துள்ள,
ஏன்னா அந்த பொண்ணுக்கு உன் மேல காதல் இல்லை என்று வெற்றி அடி வெளுத்து விட்டான் அந்த ஜந்துவை.
அதிரல் 1
அதிரல் சுகந்தமே!!
அதிரல்- காட்டுமல்லிகை
சுகந்தம்- வாசனை
ஐயோ சார்! விட்டுருங்க சார்! நான் எந்த தப்பும் பண்ணல சார்... என அந்த போலிஸ் ஸ்டேஷனே அதிர கத்திக் கொண்டிருந்தான் ஒருவன்.
ஏன்டா பொய்யா சொல்ற ஏசிபி மட்டும் வரட்டும்... உன்னை அடிக்கிற அடியில குடல் குந்தாணி எல்லாம் வெளியே வர போகுதுடி என்றார் ஏட்டைய்யா.
"நான் எந்த தப்பும் பண்ணல சார்! டீசண்டா அந்த பொண்ணு கிட்ட லவ் லெட்டர் தான் சார் கொடுக்கப் போனேன், அந்த பொண்ணு பயந்து ஐயோ அம்மானு கத்தவும் நாலு பேரும் சேர்ந்து புடிச்சு குடுத்துட்டானுங்க சார்"
...Loading...
Enjoyed this?
Sign in to clap