
யாதுமாகி நின்றாயே!
176
2.7k
EBOOK•
Completed#yathumagi nindraye#shree novels
About
திருமணம் வாழ்வில் ஒரு முறை தான் என்பது நியதியாகவே இருக்கட்டும். அந்த ஒரு முறை சரி செய்ய இயலாத அகல பாதாளத்தில் விழுந்தவர்கள் மீளாமல் இருந்திட தான் வேண்டுமா என்ன? அப்படி ஒருவனும், ஒருவளும் உறவுகள், சமூகத்தின் பார்வை கடந்து தங்களை மீட்டு ஒருவருக்கொருவர் யாதுமாய் வாழும் பயணமாக யாதுமாகி நின்றாயே!
அத்தியாயம் - 1 "நல்லா இருக்கீங்களா?" கடமைக்காக அவள் கேட்டு விட்டாலும், அவள் விழிகள் சுமந்திருந்த வலியை உணர்ந்தவனுக்கு தான் மனம் சொல்ல முடியாத வலியை உணர்ந்தது. எத்தனை உயிர்ப்பாக இருந்த விழிகள், எத்தனை பாவங்களை நொடிக்குள் காட்டிய முகம்... அவனும் அறிவானே! தாடிக்குள் ஒளிந்திருந்த உதடுகளை பிரித்து வார்த்தைகளை உதிர்த்தவன், "இருக்கேன். நீ?" என்று கேட்டவன் இடைவெளிவிட்டு, "நீங்க?" என்று திருத்திக் கொண்டு கேட்கவும் ம்ம் என்று தலையசைத்தாள் அவள். அவள் தோளில் உறங்கும் அவள் மகளின் தலையை வாஞ்சையாக...
Loading...
Enjoyed this?
Sign in to clap