
தொடரும் பந்தங்கள்
3
86
EBOOK•
Completed
About
தனக்கு மட்டும் கேட்கும் குரல் ஓசை வைத்து தேடலை ஆரம்பிக்கிறான் ஆதி. அவனுக்கு மட்டும் ஏன் கேட்கிறது. அவன் பயணம் எப்படி சொந்த ஊர் நோக்கி செல்கிறது? தன் குடும்பத்தின் சாபம் என்ன? அதை சரி செய்தாரா? கடந்த கால நிகழ்வுகள் என்ன? அனைத்தும் உள்ள நாவல் தான் இது. எனது முதல் நாவல்
விடாரபுரத்து சாபம்
அத்தியாயம் 1
சூரியன் கூட தன் ஆளுமையை நிலைநிறுத்த தயங்கும் யாரும் இல்லாத அந்த அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் நடந்து செல்ல ஆரம்பித்தான் அவன். பூச்சிகளின் ரீங்காரம் மெல்ல மெல்ல காதுகளை கிழித்துக்கொண்டு மனதின் அடியில் அமைதியாய் இருக்கும் பயத்தை தட்டிப் பார்க்க தயாராகி கொண்டிருந்தது.
அவனது கால்கள் அவன் மனதின் பேச்சை கேட்காமல் மெல்ல மெல்ல முன்னேறிக் கொண்டு இருந்தன. சுற்றிலும் தனது பார்வையை கவனமாக சுழற்றியபடியே நடக்க ஆரம்பித்தான்.
சட்டென்று ஏற்பட்ட பேரமைதியில் திரும்பி பார்க்க, "ஏன் நான
...Loading...
Enjoyed this?
Sign in to clap