
கண்ணே என் கருமணியே
908
13.7k
SERIES•
Ongoing
About
நடிகை தாராஸ்ரீ, தொழிலதிபர் அகிலன் ஆண்டர்சனை மணக்கிறாள். அவன் குடும்பம் குழந்தைக்காக வற்புறுத்த வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற முயல்கிறாள்.குடும்ப சூழல் காரணமாக நாயகி வாடகை தாயாக வருகிறாள். விதிகள் மீறப் படுகின்றன.கரு வளர்ந்தப் பின், நடிகைக்கு ஹாலிவுட் வாய்ப்பு வர, கருவை கலைக்கச் சொல்லிவிட்டு கணவனையும் டைவர்ஸ் செய்து ஹாலிவுட் பறக்கிறாள்.கருவை கலைக்க மனமில்லாத நாயகி, யாருக்கும்தெரியாமல் மறைத்து மறைந்து குழந்தையை பெற்று வளர்க்கிறாள். பூம்பாறை வரும் அகிலன் மகனை காண்பானா? நடிகை மீண்டும் வருவாளா?
கருமணி -1 “சண்முக கடவுள் போற்றி, சரவண துதித்தாய் போற்றி” மலைகளின் இளவரசி என்றழைக்கப்படும் கொடைக்கானல் மலையிலிருந்து, இருபது கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள பூம்பாறை குழந்தை வேலப்பர் கோவில் சன்னிதியில் பேரனோடு நின்ற விஜயா முருகன் துதியை ஆரம்பிக்க, “பாத்தி, பாத்தி நானே சொல்றேன்…” என “ கண்மணி.. முருகா போற்றி! கார்த்திகை பாலா… போற்றி!” என மழலை மாறாமல், மலர்ந்த முகத்தோடு சொன்னான் மூன்று வயதே நிரம்பிய மகிழ் வேலன். செக்கச் சிவந்த மேனியில், கையில்லா பனியன், அரைக்கால் ட்ரவுசரோடு, இடுப்பில் துண்டு...
Loading...
Enjoyed this?
Sign in to clap