
இருளில் மிளிரும் அருவம்..!
5
27
EBOOK•
Completed#tamillovestory#love#family
About
மரணத்தை எதிர்பார்த்து யாரும் காத்திருப்பதில்லை. மரணமும் யாருக்காகவும் எதற்காகவும் காத்திருப்பதில்லை. எதிர்பாரா நொடியொன்றில் நிகழ்ந்துவிட்ட மரணத்திற்கு பிறகு... அடுத்து என்ன? திட்டமிட்ட கனவுகளும், தவறவிட்ட நொடிகளும், செய்து விட்ட தவறுகளும், கண் முன்னால் பூதகரமாய் எழுந்து மிரட்டினால், அடுத்து என்ன? ஆதித்தனுக்கும் அப்படி தான் நடக்கிறது. தவித்து நிற்கிறவனை, வாழ்க்கை அவனின் கைப்பிடித்து எங்கே அழைத்து செல்கிறது என தெரிந்துக் கொள்ள நாவலை படியுங்கள்…
டீசர்: ஆழ்ந்த நித்திரையில் இருந்தவள் மூச்சடைக்கும் உணர்வில் உறக்கம் களைந்து எழுந்தமர்ந்தாள். அவளை சுற்றி எங்கும் இருள் கவிழ்ந்திருந்தது. 'இத்தனை நேரமா உறங்கினோம்...' என்ற எண்ணத்துடனேயே படுக்கையில் சுழன்று தேடி பிடித்து விளக்கின் ஸ்வீட்சை தட்டினாள். அது எவ்வித எதிர்வினையும் ஆற்றவில்லை என்ற போதுதான் மின்விசிறியும் சுழலாதது அவள் புத்தியில் உரைத்தது. 'போச்சுடா...' மனதிற்குள் சலித்தவளாய் எழுந்து அமர்ந்து சோம்பல் முறித்தாள் அவள். ஆடை வியர்வையில் தெப்பலாய் நனைந்து உடலோடு ஒட்டிக் கொண்டிருந்தது. வாய்...
Loading...
Enjoyed this?
Sign in to clap