Skip to content
பிரியாதே! மறவாதே!

பிரியாதே! மறவாதே!

26
144
EBOOK
Completed

About

எதிரும் புதிருமாக இருக்கும் வக்கீலான தன்விக்கிற்கும் காவல் அதிகாரியான ஆத்மிகாவிற்கும் நடக்கும் மோதலும் காதலும் தான் இந்தக் கதை. நட்பு, காதல், அன்பு, பாசம், மகிழ்ச்சி, வெறுப்பு, கோபம், துரோகம், வலி, வேதனை என பல உணர்ச்சிகளின் குவியல். என்னுடைய எழுத்தில் கொஞ்சம் அழுத்தமான கதைக்களம். கொஞ்சம் காதல் நிறையவே மோதல் க்ரைம்... சஸ்பன்ஸ்... த்ரில்லர்... சின்னதா ட்விஸ்ட் எல்லாம் சேர்ந்த கலவை “பிரியாதே!!! மறவாதே!!!”
அத்தியாயம் - 1 சென்னை உயர் நீதிமன்றத்தை நோக்கி சீறிப் பாய்ந்தது அந்த காவல் வண்டி. வண்டியின் ஓட்டுனர் இருக்கைக்கு பக்கத்து இருக்கையில் தன் திமிர் பார்வையை சாலையில் பதித்து வாயில் சுவிங்கத்தைப் போட்டு மென்றுக் கொண்டிருந்தாள் ஏ.சி.பி. ஆத்மிகா. திமிரின் மறு உருவம் எனப் பெயர் பெற்றவள். திடீரென வண்டியின் பின்னிருந்து துப்பாக்கி சுடும் சத்தமும் கண்ணாடி உடையும் சத்தமும் கேட்கவும் மறு நொடியே ஓட்டுனர் வண்டியை நிறுத்த, உடனே வண்டியை விட்டு இறங்கிய ஆத்மிகா போலீஸிடமிருந்து தப்பி ஓட முயன்ற குற்றவாளியின் நடு...
Loading...

Enjoyed this?

Sign in to clap