
விடுகதைக்கோர் விடையை தேடி: Vidikadhaikor Vidaiyai Thedi
24
119
EBOOK•
அத்தியாயம் -1
அந்தக் காலை நேரத்தில், பல வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த அந்த மண்டபத்தில் இருந்து வந்த வாத்தியக் கருவிகளின் இசையும், மேளங்களின் இனிமையான ஓசையும் அந்தத் தெருவையே இன்னிசை மழையில் நனைத்துக் கொண்டிருந்தன.
அத்துடன் மண்டபத்தின் வாசலில் போடப்பட்டிருந்த பந்தலும் சேர்ந்து, இன்னும் சிறிது நேரத்தில் அங்கு நடக்க இருக்கும் திருமணத்தைப் பறைசாற்றின.
அலங்கரிக்கப்பட்டிருந்த மாவிலைகளும் தோரணங்களும் அழகாக நின்று, வீசும் காற்றோடு அசைந்து, வருபவர்களைக் குனிந்து நிமிர்ந்து வரவேற்பு தந்து கொ
...Loading...
Enjoyed this?
Sign in to clap