Skip to content
நெஞ்சில் நிறைந்த மதியழகே...

நெஞ்சில் நிறைந்த மதியழகே...

1
191
EBOOK
Completed
Ramya Chandran
Ramya Chandran

About

விதியின் பிடியில் இரு உயிர்கள்.. முதலில் இணைந்தும், இடையில் பிரிந்தும் தனித்திருக்க, அந்த விதியே மீண்டும் இணைக்கிறது இருவரையும்.. ஒரு உயிர் நேசத்தில், ஒரு உயிர் கோபத்தில்? இரு உயிரும் இணையுமா? தெரிந்து கொள்ள 'நெஞ்சில் நிறைந்த மதியழகே ' நாவலை முழுவதுமாக படியுங்கள் நட்பூக்களே. வாசித்து விட்டு உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்...

நெஞ்சில் நிறைந்த மதியழகே..!

பகுதி...1

" ஏலேய் மருதமுத்து.

ஒன்ற பொஞ்சாதி 

கேணில குதிச்சுட்டாளாம் ..‌

ஓடியாடோய்.. டவுன் ஆஸ்பத்திரியில சேத்துருக்காவலாம் வெரசா ஓடியாடா..." 

வயது முதிர்ந்த பெரியவர் ஒருவர் கூச்சலிட.

வயக்காட்டில் தண்ணி அடைத்துக்‌கொண்டிருந்த மருதமுத்து,

மண்வெட்டியை அப்படியே போட்டுவிட்டு, 

" ஏலேய் ராசய்யா இத பாத்துக்கிடுலே நா வெரசா வந்துடுவேன் " என தன் வேலையாளுக்கு கட்டளையை பிறப்பித்து விட்டு தன்னுடைய  பழைமை மாறா புல்லெட்டில்  ஒரே தாவாக தாவி ஏறி அமர்ந்தவர் அதை ஆஸ்பத்திரியை நோக்கி செலுத்த, 

அதுவோ  ஊரை

...
Loading...

Enjoyed this?

Sign in to clap