
சுரமதில் சுரந்த சுனையமுதமே..
0
4
EBOOK•
Completed
About
இளவரசியவள் தேர்ந்தெடுக்கும் மணவாளன் ஓர் சாதாரண மானுடன் என்று அறியாமல் அவன்பால் நேசம் கொள்கிறாள். அவளது நேசக்கோமகனோ அவளை கரம்பற்றும் முன் பல இன்னல்களை எதிர்கொள்கிறான். அவன் யாரென்று அறிவாளா? அவன் கரம் சேர்ந்தாளா அல்லது துரோகத்தால் வீழ்ந்தாளா? தெரிந்து கொள்ள முழுதாக இந்நாவலை வாசியுங்கள் நட்பூக்களே. வாசித்து விட்டு கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்..
சுரமதில் சுரந்த சுனையமுதமே..
சுரம் - பாலைவனம் என்றும் பொருள் வரும். அந்த பாலைவனத்தில் சுரந்த சுனை( ஊற்று) அமுதம் என்பது தலைப்பின் பொருள்..
சுனையமுதம் -1
இரைதேடி நெடுந்தூரம் பயணம் மேற்கொண்ட பறவையினங்கள் தத்தமது கூடுகளுக்கு வந்து சேர்ந்து தஞ்சமடைய ஏதுவான காலநிலையான மாலைப்பொழுது மஞ்சள் நிறத்தில் மிளிர்ந்தது.
மாலைப்பொழுதும் சிறிது சிறிதாக மறைந்து கருமை நிறத்தை படர் விட. வான்மேகமும் அக்கருமையைத் தன்னுள் பொருத்திக்கொள்ள, இரவும் மெதுவாக மலரத் துவங்கியிருந்தது. பகலவனவன் தன் பணியை இனிதே நிறைவு செ
...Loading...
Enjoyed this?
Sign in to clap