
எரிகின்ற குளிர்நிலவே..
0
113
EBOOK•
Completed
About
இருவேறு உலகம்.. ஒரே பொக்கிஷம் இரு உலகையும் பிரித்து வைக்கிறது. ஒன்று பொக்கிஷத்தை உயிர் போல் பாதுகாக்க, ஒன்றோ அவர்கள் உயிரை கொன்று அதை அபகரித்ததில், சாபம் பெற்று தலைமறைவாகி போனது. மீண்டும் அந்த பொக்கிஷம் நல் உலகை அடையுமா? மறு உலகின் சாபம் தீருமா? தெரிந்து கொள்ள இந்த நாவலை முழுவதுமாக படியுங்கள் நட்பூக்களே.
வாசித்து விட்டு கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்..
எரிகின்ற குளிர்நிலவே..1
அந்த இரவு வேளையில் ஊரே நித்ரா தேவியின் பாதத்தில் சரண் அடைந்து இருந்தது..
நேரம் நள்ளிரவு 12 மணியைக் கடந்திருந்தது..
அந்த கருங்கும்மென்று இருந்த இருட்டில் தெருவிளக்குகள் விட்டு விட்டு எரிந்து கொண்டிருந்தன.. அனைத்து வீடுகளின் கதவுகளும் சாத்தப்பட்டு இருந்தன..
கீச்சு கீச்சென்று சிறுசிறு பூச்சிகளின் சத்தங்களும் , சில்வண்டுகளின் ரீங்காரமும் காதைத் துளைத்தன..
அதே நேரம் மழை பெய்து முடிந்திருந்ததால் , ஆங்காங்கு மரங்களில் தொங்கிக் கொண்டு இருந்த மழைத் துளிகளும், சாலையோரம் குட்டை போல்
...Loading...
Enjoyed this?
Sign in to clap