
குருதியின் சுவை அறியாயோ?
0
85
EBOOK•
Completed
About
"யுகங்கள் கடந்தும் அழியாத ஒரு காதல்... குருதி தேடும் ஒரு தீராத தாகம்!"
நரகவிசேட பூமியூர் - பெயரிலேயே நடுக்கத்தை வரவழைக்கும் அந்த ஊரில், அவளுக்காக யுகங்களைக் கடந்து ஒருவன் காத்திருக்கிறான். அவன் மனிதனா? மிருகமா? அல்லது குருதியின் சுவைக்காகத் தவிக்கும் ரத்தக் காட்டேரியா?
சாபமும் மோட்சமும் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் அந்தப் பௌர்ணமி இரவில், சசியின் காதல் வெல்லுமா? அல்லது பழங்காலப் பகை அவளை மீண்டும் காவு வாங்குமா? ரத்தமும் காதலும் இழைந்த ஒரு மாயாஜாலப் பயணம்! வாசித்து பாருங்கள் நட்பூக்களே..
குருதியின் சுவை அறியாயோ?
சுவை- 01
எப்போதும் சூடான வெம்மையைப் பரப்பிக் கொண்டிருக்கும் செஞ்சூரியன் அவன் ஏனோ வெண்மேகத்திடம் ஊடல் கொண்டு மலை முகடுகளில் சென்று மறைந்து கொள்ள அடம் பிடித்தான். ஆனால் நான் விடுவேனா என்பது போல் பின் துரத்தியது மேகங்கள். அதனிடம் ஊடல் கொண்டு கருமேக கூட்டத்திற்குள் தன்னை ஒலித்துக் கொண்டான் கதிரவன். அவனை காணும் ஆவல் அதிகரிக்க, தானும் கருமேகத்துடன் இணைந்தது மீதம் இருந்த மேகக் கூட்டங்கள் யாவும். அதிக அளவில் சேர்ந்த மேகக் கூட்டங்களின் பாரம் தாங்காமல் கண்ணீரை மழைத்துளிகளாய் ச
...Loading...
Enjoyed this?
Sign in to clap