Skip to content
தேவதையவள் எந்தன் அருகினிலே..

தேவதையவள் எந்தன் அருகினிலே..

6
85
EBOOK
Completed
Ramya Chandran
Ramya Chandran

About

பெண்ணாய் பிறந்து விட்டாளென பெற்றவரால் வெறுக்கப்படுகிறாள் அவள். பெற்றவரின் வெறுப்பு எல்லையைக் கடக்கையில் அவள் வாழ்வில் வசந்தத்தை தந்தவனே சூனியத்தையும் தந்து விட்டு போகிறான். உயிரை வெறுத்து வாழ்பவளை தேவதையென தாங்கிட வருகிறான் அவன் நாயகன்.. அனைத்தையும் மறந்து அவனை ஏற்பாளா அவள்? தெரிந்து கொள்ள முழுதாக இந்நாவலை வாசியுங்கள் நட்பூக்களே. வாசித்து விட்டு கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்..

தேவதை -1

இரவு மணி ஒன்பது இருக்கும். வருணபகவான் பூமியில் இருக்கும் வெப்பத்தைத் தணித்து விடும் ஆவலோடு தன்னிடமிருந்த ஒட்டுமொத்தத் தூவல்களையும் (மழைத்துளி)  பூமிக்குத் தூது அனுப்பி வைத்திருந்தான்  போல.

கொண்டல் (மேகம்), அது  விலகிக் கொள்ள வானில் இருந்து தூவல்களானது  கொண்டலின் நகர்வுக்குப் பிறகு  நிலமகளை நோக்கித் தங்கு தடையின்றி ஓடிவந்து முத்தமிட்டு அணைத்து உச்சி குளிரச் செய்து கொண்டிருந்தது.

தன் மீது முத்து முத்தாக விழும் தூவல்களையும் பொருட்படுத்தாது பெண்ணொருத்தி அங்கிருந்த ஆநிரைகளை இழுத்துத்  தொழுவத்தில் கட

...
Loading...

Enjoyed this?

Sign in to clap