
நீ வாழ நான் வருவேன் ❤️🔥
42
184
SERIES•
Ongoing
About
"மரணம் அவளை கணவனிடமிருந்து பிரித்தாலும், அவன் ஆன்மா அவளை விட்டு அகலவில்லை. காலம் அவளை காதலனிடமிருந்து பிரித்தாலும், அவன் காதல் அவளை மறக்கவில்லை. விதி வகுத்த தனிமையில் வாடும் ஒரு பெண்ணின் வாழ்வு சிறக்க, நிழலாய் தொடரும் இறந்த கணவனும், நினைவாய் துடிக்கும் முன்னாள் காதலனும் நடத்தும் பாசப் போராட்டம்."
அந்தத் திருமண மண்டபம் முழுவதும் பொன்னிற விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. நுழைவு வாயிலில் இருந்து மண்டபத்தின் உள்ளகம் வரை விதவிதமான மலர்களால் பின்னப்பட்ட தோரணங்கள் காண்பவரின் கண்களை வசீகரித்துக் கொண்டிருந்தன. அவற்றின் இயற்கையான வாசம் காற்றில் கலந்திருந்தது. திருமண மண்டபத்தின் நுழைவு வாயிலில் இருபக்கமும் வரிசையாக மொத்தம் எட்டு யானைகள் அலங்காரத்துடன் நின்று கொண்டிருந்தன. கார் பார்க்கிங் ஏரியாவிற்கென்று தனியாக ஐந்து ஏக்கர் நிலத்தைச் சீர்படுத்தி ஒதுக்கியிருந்தார்கள். அங்கு ஐநூறுக்கும் மேற்பட்ட...
Loading...
Enjoyed this?
Sign in to clap