
என்னுள் அடங்கிய அசுரனே..
0
85
EBOOK•
Completed
About
பாசமிகு இரு சகோதரிகளின் வாழ்வியல் இது. பெற்றவரில்லா நிலையில் அவர்கள் நிர்கதியாய் நிற்க, துணை நிற்க வேண்டிய உறவோ தூக்கி எரிகிறது எச்சிலென எண்ணி.
வைராக்கியம் கொண்டு நிமிர்ந்து நிற்கிறாள் மூத்தவள். தன்னை மெழுகென உருக்கி சின்னவளை ஆளாக்கிட, அதற்காக அவள் இழந்தவை ஏராளம்.
சந்தித்த துரோகங்கள் ஏராளம், ஏளனங்கள் ஏராளம்,. சந்தித்த கஷ்டங்கள், வேதனைகள் ஏராளம்.
அவள் துவண்டு வீழ்கையில் தோள் சேர்கிறான் அவன்.
அவன் நேசத்தை ஏற்பாளா அல்லது விலக்கி, தொலைவாய் போவாளா? வாசித்து விட்டு கருத்துக்களைப் பகிருங்கள்.
என்னுள் அடங்கிய அசுரனே.
ரம்யா சந்திரன்
அசுரன் -01
இருளை இரவலாகப் பெற்றது போல் அகன்று, பரந்து விரிந்திருக்கும் ஆகாயத்தின் இருளை விரட்டும் முயற்ச்சியில் வெண்மதியவள் தன் பயணத்தை தொடங்கி இருக்கும் இரவு நேரம்..
திருப்பூர் மாவட்டத்தின் மேற்கு பகுதி..
அடுத்தடுத்து நெருக்கமாக வீடுகளைக் கொண்ட ஒரு ஒரே காம்பவுண்டில் இருக்கும் அந்த வீட்டின் சமையலறையில் அரக்கப்பரக்க சப்பாத்தி போட்டுக் கொண்டிருந்தாள் அவள். ஒரு புறம் சப்பாத்தியை தேய்த்து தோசைக்கல்லில் அதை வார்த்து விட்டு அதேநேரம் மறுபக்க அடிப்பில் இருக்கும் வெஜி
...Loading...
Enjoyed this?
Sign in to clap