
காதலாய் தூறுதே வான் மேகம்!
6
37
EBOOK•
Completed#romance#viba visha#kaathalaai thooruthe van megam#tamil novel#best seller#top rating#village story#collage love
About
காதல்… காதல்… காதல் மட்டுமேயான இதமான கதை!
தத்துப்பெண்ணாக வளர்ந்த நாயகி, ஒரு விபத்தில் வளர்ப்புத் தந்தையையும் சகோதரியையும் இழக்கிறாள்; தாய் கோமாவில் விழுகிறார். அந்த சூழலில், தன்னை அம்மாவின் பெற்றோரிடம், தான் அவர்களது சொந்த மகள் எனப் பொய் சொல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.
அதே நேரத்தில் நாயகனை சந்திக்கும் அவள் திகைக்கிறாள். அந்த திகைப்பின் காரணம் என்ன? அவள் யார்? ஏன் அந்தப் பொய்க்கு காரணம் என்ன?
இதற்கெல்லாம் மழையின் சாட்சியத்தோடு பதிலளிக்க வருகிறது,
காதலாய் தூறுதே வான் மேகம்! 🌧️
காதலாய் தூறுதே வான் மேகம்!
அத்தியாயம் - 1
வானமெங்கும் நீலமில்லா வெண் மேகம்.. பூமியெங்கும் நிலமில்லா.. நீலம் பூசிய ஆழ்கடல். அந்தப் பெருஞ்சாகரத்தில்.. ஒரே ஒரு ஒற்றைப் படகில், அவனும் அவளும் மட்டும் தனித்திருக்க.. அவர்களிருவரும் சுற்றி இருக்கும் எதையும் உணராது, அவனுள் அவளையும், அவளுள் அவனையும் தொலைத்து.. விழி வழி உயிர் கரைந்து கொண்டிருந்தனர்.
திடீரென்று வானம் கிடுகிடுத்து இடி இடிக்கும் சத்தம் கேட்க, விருட்டெனப் படுக்கையில் இருந்து வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்தாள் லயா.. அபிலயா.
'சே.. எல்லாம் கனவா?' என்
...Loading...
Enjoyed this?
Sign in to clap