
உறவாய் உயிரினில் கலந்தாய் - பாகம் 01
1
32
EBOOK•
Completed
About
உறவுகளுக்காக மெழுகாய் உருகிடும் இரு ஜீவன்களின் வாழ்வில் நிகழும் எதிர்பாராத இன்னல்கள், திருப்பங்கள், சுவாரஸ்யமான நிகழ்கள், காதலின் பிரிவு, அன்பின் ஆழம், குடும்ப உறவுகளின் முக்கியத்துவம், நட்பின் மேன்மை...
உயிரானவனின்
உயிருடன்
உற்ற
உறவினை
துறந்து
உயிரற்று
வாழ்ந்திடும்
பேதையவள்...
மங்கையவளின் கலங்கிட்ட வாழ்வினை தெளிவாக்கி கரம் சேர்வானா..?, மன்னவன்..
தெரிந்து கொள்வோம் வாருங்கள் நட்பூக்களே...
இருள் படர்ந்த அந்த அதிகாலை
வேளையிலும் பறவைகள் அங்கொன்றும்
இங்கொன்றுமாய் பறந்து கொண்டிருந்தன ..
கிழக்கில் தன் செந்நிற ஒளியை பரவலாக படரவிட காத்திருக்கும் செங்கதிரோன் போல் கண்கள் இரண்டும் தீச்சுவாலை என
அனலை கக்க மரங்களுக்கு இடையே
நின்றிருந்த இரு நிழல்களை வெறித்துக்
கொண்டிருந்தான் , அவன்..
அவன் அருகில்
நின்றிருந்த மற்றவனோ,
" அடேய் நல்லவனே ,
நீ என்னடா புது பொண்டாட்டிய பாக்குற மாதிரி வெறிக்க வெறிக்க பாக்குற அவனுங்க ...
போயிட போரானுங்க டா ,
வா டா போய் பிடிக்கலாம்.." என்றான்....
அந்த அவனும் திரும்பி அவனை
முறைத்து
...Loading...
Enjoyed this?
Sign in to clap