
முகிழ்க்கும் மனங்கள் - Muzhikum Manangal
108
574
EBOOK•
Completed#nandhinisugumaran#love#life#family#drama#relationship#friendship#Tamilstory#Tamilnovel#tamil#viral#storybook#audio#audionovel#audiostory#audiobook#NSnovels#entertainment
About
கதை மாந்தர்கள் ஒவ்வொருவரின் குணமும், துவக்கத்தில் இருந்து இறுதி வரை எவ்வகையான மாற்றங்களுக்கு உட்பட்டு நிலைபெறுகிறது என்பதை விவரிப்பதே முகிழ்க்கும் மனங்களான இக்கதை.
எப்பொழுதும் ஒரு பெண்ணின் பக்கம் இருந்து அவளின் உணர்வுகளை எழுத்துகளாய் கொடுக்கும் நான், இதில் முதன்மை கதாபாத்திரமாய் திருநீலகண்டனைச் சித்திரித்து. அவனது உணர்வுகளையும் தேவைகளையும் கதையாய்ச் சொல்ல முயன்றிருக்கிறேன்.
இதோ எனது எழுத்துகளின் முகிழ், தங்களின் வாசிப்பிற்காக..
முகிழ்க்கும் மனங்கள்
நந்தினி சுகுமாரன்
பதிப்புரிமை @ 2024 நந்தினி சுகுமாரன்.
அத்தியாயம் 1
கடிகாரத்தின் நொடி முள் நகரும் வேகத்திற்கு ஈடுகொடுக்கும் விதமாய், சமையலறைப் பணியில் தன்னை முற்றிலுமாய்த் தொலைத்து இருந்தாள் துர்கா லெட்சுமி.
அள்ளி முடிந்து கொண்டை இடப்பட்ட குழல், சற்றே பூசினாற் போன்ற தேகம், உடலை முழுவதுமாய் மறைத்திருந்த இரவு உடை, அதில் அங்கங்கே கறை, கழுத்தோடு தோள்பட்டை மற்றும் முதுகுப் புறத்தைச் சுற்றிலும் பரவிய வியர்வையின் ஈரம் என அடுப்பில் இருந்து தாக்கிய அனலில், உணவோடு சேர்ந்து அவளு
...Loading...
Enjoyed this?
Sign in to clap