
சிதைந்தாலும் துளிர்த்தெழும் மலரே..
0
111
EBOOK•
Completed
About
அவளின் உற்ற உறவான அவன் இல்லை என்றான பின் அவன் உயிரை மட்டுமே உறவாய் கொண்டு உயிர் வாழ்கிறாள் அவள். அந்த உயிரும் இல்லை என்ற நிலை வரும்போது அவள் நிலை? தெரிந்து கொள்ள முழுமையாக இந்த நாவலை வாசியுங்கள் நட்பூக்களே.. வாசித்து விட்டு கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்...
சிதைந்தாலும் துளிர்த்தெழும் மலரே..!
மலரே - 1
அந்த ஓட்டு வீட்டின் மண் தரையில் பாய் விரித்துப் படுத்திருந்தவள் தனது காதுகளைக் கைக்கொண்டு மூடியும் எந்தப் பிரயோஜனமும் இல்லை. இரண்டு தெரு தள்ளியிருந்த ஒரு வீட்டில் கட்டப்பட்டிருந்த ரேடியோவின் சப்தம் காதைத் துளைத்தது.
புரண்டு புரண்டு படுத்தவளுக்கு அப்போதும் தூக்கம் வராதிருக்க, எழுந்து அமர்ந்து இடைக்குக் கீழே நீண்டு கற்றையாகத் தொங்கிய தன் கருங்கூந்தலை அள்ளி ஒற்றைக் கொண்டையில் அடைத்தாள்.
பெண்ணவளின் மூடிய கயல் விழிகளுக்குள் கருமணிகள் அங்கும் இங்கும் சுழ
...Loading...
Enjoyed this?
Sign in to clap