
உண்மையெது பொய்யெது சொல்லிடு அன்பே
0
153
EBOOK•
Completed
About
கிராமத்துத் துடிதுடிப்போடு வளரும் சிவாங்கிக்கும், அவளைக் கண்டதும் மணக்கத் துணியும் நாயகனுக்கும் இடையிலான அழகான காதல் மோதல்கள் நிறைந்த கதை இது. குடும்ப மர்மங்கள் மற்றும் துரோகங்களுக்கு நடுவே, தங்களின் ஊடல்களைக் கடந்து மனது விட்டுப் பேசி அவர்கள் எப்படி இணைகிறார்கள் என்பதை நெகிழ்ச்சியுடன் விளக்குகிறது இக்காவியம்.
உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!
பாரதி கண்ணன்
அத்தியாயம் - 1
"காட்டுப் பயலே கொஞ்சிப் போடா.. என்ன ஒருக்கா.. நீ.."
"ஏ பிள்ள சிவாங்கி.."
"என்னக்கோய்?"
"என்ன புள்ள இங்க நிக்குறவ? இந்நேரோ உன்ன பொண்ணுப் பார்க்க மாப்ள வீட்டாளுக ஓ வீட்டுக்கு வந்துருப்பாக.. நீ என்னடான்னா இங்க நிக்குதவ.. வெள்ளனே வீடு போ.. அப்புறோ உன் அப்புச்சிக்கு யாரு பதில் சொல்றது?"
"செத்த நேரோ ரயிலப்பாக்க விடுதீகளா.? நா வரேன் காவேரிக்கா.."
தன் வீட்டை நோக்கி ஓடிச் சென்றாள் சிவாங்கி. 'இந்த கல்யாணத்தை எப்படி நிறுத்த? அப்பாருகிட்ட சொன்னா
Loading...
Enjoyed this?
Sign in to clap