ஒழுகும் நிலவு வழியும் இரவு

ஒழுகும் நிலவு வழியும் இரவு

15
3
EBOOK

அத்தியாயம் - 1

பூமி வருடம் - 4000

ஒழுகும் நிலவு!

வழியும் இரவு!

இமைக்கும் விண்மீன்!

அலையும் காற்று!

மருகும் தனிமை!

மிரளும்‌ நான்!

பால்நிலவு ஒழுகிக் கொண்டிருந்தது. அதற்கு நேரெதிராக இரவு வழிந்து கொண்டிருந்தது. மைத் தொட்டு இருள் வரைந்த தூரிகை, திருஷ்டி கழிக்க, நிலாப் பொட்டொட்டி அழகு பார்த்ததாம். நான்காயிரம்‌ வருடங்களாக இந்த உலகத்தில் மாறாத சில விடயங்கள் உண்டென்றால் அது திரண்ட இருளும், உருண்ட நிலவும்தான். மற்றவையெல்லாம் மருகித் தவித்து, மருவி, புள்ளிகளாய் மறைந்துவிட்டது. உலகத்தில் மாற்றம் காணாத மாண்புக

...
Loading...

Enjoyed this?

Sign in to clap