
உன் நெஞ்சம் என் மஞ்சம் கள்ளா!
3
83
EBOOK•
Completed
About
கசப்பான கடந்த காலமும், தனிமையின் வலியும் துரத்த... தன் இரு பெண் குழந்தைகளுக்காக மௌனமாகப் போராடும் மலர்க்கொடி! எதிர்பாராத சூழலில் அவள் வாழ்வில் நுழையும் டாக்டர் அர்ஜுன்!
சமூகம் விதிக்கும் வேலிகளைத் தாண்டி, காயப்பட்ட இரு இதயங்கள் அன்பால் ஒன்றிணைய முடியுமா? பாரதி கண்ணனின் எழுத்தில், உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் விரியும் ஓர் அழகான காதல் காவியம்: "உன் நெஞ்சம் என் மஞ்சம் கள்ளா" – வாசிக்கத் தவறாதீர்கள்!
உன் நெஞ்சம் என் மஞ்சம் கள்ளா
பாரதி கண்ணன்
அத்தியாயம்1
"இப்ப என்னைய என்ன தான் பண்ண சொல்றீங்க?"
"உன் மாமாவை கல்யாணம் பண்ணிக்கோ.. அது தான் உனக்கும் உன்னோட பிள்ளைங்களுக்கும் நல்லது.."
"என் புருஷன் இறந்து முழுசா ஒரு வருஷம் கூட ஆகல.. அதுக்குள்ள ரெண்டாவது கல்யாணம் பண்ண சொல்றீங்க? உங்களுக்கு மனசாட்சியே இல்லையா?"
"ஆமா.. பொல்லாத புருஷன்.. சரியான குடிகாரன்.. அவனை கல்யாணம் பண்ணிக்கிட்டு நீ என்ன சுகத்தை கண்ட? நானும் உன் அப்பாவும் இன்னைக்கு இருக்கோம்.. நாளைக்கு இருப்பாமான்னு சொல்ல முடியாது.. ரெண்டு பொம்பள பிள்ள
Loading...
Enjoyed this?
Sign in to clap