
analai anaikum punal aval
3
51
SERIES•
Ongoing
About
கதை முன்னோட்டம்
கதை நாயகன் காவல்துறையில் உயர்ந்த இடத்தில் இருப்பவன். அவன் விரும்பும் பெண் வருணிஷா. அவள் விபத்தொன்றில் உயிர் நீத்துவிடுகிறாள். அதற்கு காரணமானவர்களை பழிவாங்க திரியும் நாயகன் தீனதயாளன். வெறுப்பை உமிழ்பவன்.
நாயகி தன்விகா ஓர் மாடல்.தந்தையை இழந்தவள். தாய் கோடீஸ்வரன் ஒருவனை மறுமணம் புரிந்துள்ளார். நேத்ரா எனும் தங்கை ஒருத்தி.
அம்மாவின் தம்பி ராகவன். பெண்பித்தன். பணக்காரர்கள் வீட்டில் பாசத்திற்கு ஏங்குபவள்.
எதிர்பாராத பிரச்சினையில் சிக்கி நாயகனிடம் மாட்டிக் கொள்ளும் நம் நாயகி.
கதிரவன் தன் கடமைகளை செவ்வனே
நிறைவேற்ற பொழுது புலர்ந்ததும் வானில் குடியேறிவிட்டான்.
காலைக்கதிரவனின் ஒளி அனைத்து இடங்களிலும் பரவியிருக்க அந்த வீட்டில் மட்டும் ஒளி பரவாதிருக்க யன்னல், கதவுகள் அனைத்தும் திரையிட்டு மறைக்கப்பட்டிருந்தது.
மூடிய அறையொன்றிலிருந்து சிகரட்டின் நெடி வெளியே வந்துகொண்டிருந்தது.
அறைக்குள்ளே மது உண்ட மயக்கத்தில் சுற்றம் மறந்து மயங்கிக் கிடந்தான் தீனா.
அவனின் தவத்தைக் கலைக்கும் நோக்கில் தொலைபேசி அழைப்பானது பலமுறை ஒலித்தது.
மூடியிருந்த கண் திறவாமலேயே கைகளால் துழாவி இடைவிடாமல் அழைத்
Loading...
Enjoyed this?
Sign in to clap