
நீயே எந்தன் மகளாய்
339
2.2k
SERIES•
Ongoing
About
இந்த நாவல் " நீயே எந்தன் மகளாய்.. " தமிழ் சங்கம் வளர்த்த, வைகை பாயும் மதுரையில் வாழும் நான், இந்த மண்ணின் கலாச்சாரத்தையும், வாழ்வியல் முறையையும், மக்களின் உணர்வுகளையும் , அவர்களோடே வாழும் சக மனுசியாக , மண் மணம் மாறாத மதுரை வட்டார வழக்கோடு , இந்த மண்ணின் வீரம் சொல்லும் ஜல்லிக்கட்டு விளையாட்டு, அதனை மீட்க போராடிய தமிழர்களின் புரட்சி போராட்டம் ஆகியவற்றை, ஒரு மாடுபிடி வீரனின் வாழ்வியலோடு சேர்த்து தந்துள்ளேன். வாசக நெஞ்சங்கள் வாசித்து விமர்சனம் தாரீர்.
1. தைப் புரட்சி மீனாட்சி அருளும் மதுரையில் மங்கையர்க்கரசியும், மங்கம்மாளும் ஆண்ட வையை மண்ணில். பெண்ணவள் மனம் கொய்ய பேதையரை தன் வசப்படுத்த ஆடவர் கண்ட வழி! சீறி வரும் ஏறுதழுவி- அதன் திமில் பிடித்துத் திமிர் அடக்கி, ஊர் மெச்ச காளையை அடக்கி சல்லி வென்ற காளையிவன்- என தம் வீரம் பறைசாற்றுவது! "சீறிவரும் ஏறுதழுவி அதன் கொம்பில் கட்டிய சல்லியை அவிழ்த்து, தன் வீரம் பறை சாற்ய தமிழினம் எங்கள் இனம். மாடுகளை விலங்கினமாகப் பார்க்காமல் மண்ணின் மைந்தர்களாகிய எங்களுடன் உடன் பிறந்த சகோதரனாகவே, பாவித்து...
Loading...
Enjoyed this?
Sign in to clap