
தித்திப்பாய் ஓர் சாரல்
15
803
SERIES•
Ongoing#பெண்கள்#ஒரு ஹீரோ இரண்டு ஹீரோயின்
About
வாழ்க்கையில் சில காயங்கள் மறந்து போவதில்லை…
ஆனால் அந்த காயங்களுக்குள் கூட காதல் மெதுவாக முளைக்கலாம்.. புரிதல் இல்லாமையாலும் தவறான எண்ணங்களாலும் தள்ளிப் போகிறது. உண்மைகள் வெளிவர ஆரம்பிக்கும் போது, காதல் மெதுவாக அவர்களுக்குள் மீண்டும் பிறக்க தொடங்குகிறது..
காதல், குற்றவுணர்வு, பழி, மன்னிப்பு –
இந்த எல்லாவற்றின் நடுவே மனிதர்களின் மனங்கள் எப்படி மாறுகின்றன என்பதையே பேசுகிறது இக்கதை..
கண்ணீரின் நடுவே கூட ஒரு துளி இனிமையான சாரல் விழும்.. அந்த சாரல்களின் கதை தான் இது..
பகுதி - 1 மெல்ல மெல்ல சூரிய ஒளி கதிர்கள் பூமியில் படர்ந்து கதிரவன் வந்து விட்ட செய்தியை உலகிற்கு எடுத்துரைத்துக் கொண்டிருந்த காலை வேளை!! நான்கு திசையிலும் பச்சை தாவணி போர்த்திருந்த வயல்களுக்கு நடுவில் தன் வலிய கரத்தை தலைக்கு முட்டுக் குடுத்து உறங்கிக் கொண்டிருந்த இளங்காளையின் துயில் கலையும் நேரத்தில் தென்றலான காற்றும் அவன் மேனியை தழுவி செல்ல, அதில் கண்ணைச் சுருக்கி நெற்றியில் காற்றுக்கு ஆடிய தன் கேசத்தை கோதியபடி எழுந்தமர்ந்தான் நிலவன். கண்ணை மூடித் திறந்தவன் எழுந்து நின்று தன் முறுக்கேறிய உடலை...
Loading...
Enjoyed this?
Sign in to clap