
என் இதயத்தை வென்றவனே!(முழுக்கதை)
20
91
EBOOK•
Completed
About
ஒரு நியாயமான காரணத்திற்காக திருமணமே வேண்டாம் என இருக்கும் பெண்ணவளை திருமணம் செய்ய முடிவெடுக்கும் ஆண்மகன்.. இவர்கள் இருவருக்கும் நிகழ்ந்து கொண்டிருக்கும் பனிப்போரின் இடையில் நாயகனின் வாழ்வில் ஏற்பட்ட திருப்பம் அவன் சந்திக்கும் பிரச்சனைகள்.. பிறகு இறுதியில் அவனுக்கு ஏற்படும் சவால் அதை முறியடித்தானா ? இல்லையா ? நாயகியைத் திருமணம் செய்து கொண்டானா ? இல்லையா ? என்ற கேள்விகளுக்குப் பதில்கள் கதைக்குள்ளே இருக்கின்றன. காதல் கதையானாலும் ஆக்ஷனிலும் குறைவு இருக்காது..மகிழ்வோடு படியுங்கள். குறுநாவல் தான்..
அத்தியாயம் 1 காற்றில் அலை அலையாய் பறக்கும் கூந்தலை ஒதுக்கி விட்டு தன் தோழியின் இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து கொண்டு இயற்கை அன்னையின் அழகான தவறாம் மழையை ரசித்துக் கொண்டு இருந்தாள் அதிதி. பூங்காவில் வண்டியை நிறுத்தி விட்டு ஒரு இடத்தில் அமர்ந்தனர் இருவரும். "என்ன மேடம் ரொம்ப சந்தோஷமா இருக்கிற மாதிரி தெரியுது?"என்றாள் அவளது தோழி கீர்த்தி. "ஆமா கீர்த்தி. எனக்கு இன்னைக்கு ரொம்ப முக்கியமான நாள் அதான் " "அப்படி என்ன முக்கியமான நாள்?"என்று யோசிக்கலானாள் கீர்த்தி "நமக்குக் காலேஜ் முடிஞ்சு ரொம்ப...
Loading...
Enjoyed this?
Sign in to clap