
காந்தள் நீயே காதல் தீயே
24
646
SERIES•
Completed# Doctor Couple #College love
About
திருவனந்தபுரத்தின் வெண்ணெய் அழகன் ஹரிஹரன் நாராயணனுக்கும் சாத்தூர் காராச்சேவு காந்தள் மலருக்கும் இடையே ஏற்படும் காதல் அவர்கள் இருவரையும் சார்ந்த குடும்பத்தினரிடம் எந்த விதமான மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்று சொல்வது தான் இந்தக் காந்தள் நீயே காதல் தீயே கதையின் கரு.
1 "எளா காந்து..... எங்கூட்டுல இருக்குற எல்லா தொட்டியிலயும் அப்புறம் அண்டா, குண்டா, சருவம் எல்லாத்துலயும் தண்ணியப் புடிச்சு ரொப்பிட்டேன்டீ நானு! பைப்பு இங்கண சும்மாத்தா கெடக்கு; வந்து நீயி தண்ணியடிக்க வர்றியா?" என்று கேட்ட நாலாவது வீட்டு பிரேமாக்காவிடம், "ஓவ்..... இந்தா வாரனுக்கோவ்!" என்று குரல் கொடுத்தாளே ஒழிய அவளது தொட்டி இருக்கையில் வாகாக போடப்பட்டிருந்த சாக்கில் இருந்து சத்தத்தை மட்டும் பக்கத்து வீட்டு வரை அனுப்பியவள் இன்னும் அவள் உட்கார்ந்திருந்த போஸில் இருந்து எழுந்த பாட்டைக் காணோம்!...
Loading...
Enjoyed this?
Sign in to clap