
நேசம் நீயாகிறாய்...!!
20
135
EBOOK•
Completed
About
நாயகன் மீதுள்ள எதிர்மறை எண்ணங்களால் திருமணம் வேண்டாம் என்ற நாயகி, திருமண பந்தத்தில் இணைந்தபின் என்னவானது என்பதே கதை.
நேசம் நீயாகிறாய்…!!
நேசம் 01
“ஸ்னேஹமோ ப்ரேமமோ
ஈடிலா நேயமோ..” துள்ளலுடன் பாடியவாறு செடிகளுக்கு நீர் ஊற்றிக் கொண்டிருந்தாள் ஒருத்தி.
தன் தோட்டத்தில் பூச்செடிகள் நடுவதே அவள் வேலை. தினமும் அவற்றைப் பராமரித்து வளர்ப்பதிலேயே நேரங்கள் கழியும்.
நீர் பாய்ச்சி முடித்தவள் வீட்டுத் தோட்டத்தின் நடுவில் வீற்றிருந்த பலகை பெஞ்சில் அமர்ந்து கொண்டாள்.
அவள் தேன் நிலா!
வயது இருபத்தி நான்கு. சாதாரண நிறம், கருகருவென்ற சுருள் முடி அவளை அழகு செய்திடும்.
சுகுமாரன், சுசீலா தம்பதியினரின் புதல்வி அவள். படிப்பில் ஆர்வம் இல்லாதத
...Loading...
Enjoyed this?
Sign in to clap