Skip to content
கண்ணும் கண்ணும் உறவாட

கண்ணும் கண்ணும் உறவாட

80
223
EBOOK
Completed#love#Relationship
Rithi
Rithi

About

கண்ணும் கண்ணும் உறவாட.... கண்ணும் கண்ணும் உறவாட வேண்டுமென்றால் முதலில் இரு கண்களும் அதற்கு இணைய வேண்டும் தானே? ஒரு கண்ணின் ஆசையை மற்றொரு கண் துற்றமாய் நினைத்தால் அந்த கண் என்ன செய்யும்? முதலில் அழும். அடுத்து ஆறுதல் தேடும். அடுத்ததாய் உண்மை அறியும். இறுதியாய் தனக்கு தான் மட்டும் தான் என்ற உண்மையை புரிந்து விலகும். இத்தனை நடக்கும் நேரத்தில் அந்த மற்றொரு கண்ணுக்கு கொஞ்சம் கொஞ்சமாய் நிதர்சனம் புரிந்து தன் இணை கண்ணை தேடினால்? நிச்சயம் ஏற்று கொள்ளும் தான்.

கண்ணும் கண்ணும் உறவாட!

அத்தியாயம் 1

“பரத் ப்ளீஸ்! என்ன பிரச்சனை உனக்கு? ஏன் இப்படி பிகேவ் பண்ற?” திவ்யா தம்பியின் அருகில் வந்து மெதுவாய் என்றாலும் கோபமாய் தான் கேட்டு வைத்தாள்.

“ஏன் எனக்கென்ன பிரச்சனை?” என்ற பரத் கீழே நின்று கொண்டிருந்தவன் ஒரே குதியில் மேடையின் மேலே அமர்ந்துவிட, செய்வதறியாமல் நின்றுவிட்டார் பரத்தின் தாய் ராஜேஸ்வரி.

“போலாம் பரத்! பிரச்சனை பண்ணாத! கிளம்பு!” என மீண்டும் திவ்யா கூற,

“நான் என்ன க்கா பிரச்சனை பண்றேன்? நான் பிரச்சனை பண்ற மாதிரியா இருக்கு உனக்கு? நியாயம் கேட்குறேன்!” கடைச

...
Loading...

Enjoyed this?

Sign in to clap