
மீண்டும் தீண்டும் மின்சார பாவையே
61
811
SERIES•
Completed#love story#college story
About
கல்லூரி ரீயூனியனில் பிரிந்த காதலனை சந்திக்கும் கதாநாயகி. அவன் மேல் கோபமாக இருக்க. அவனோ தன்னை நினைக்காமல், குழந்தை கணவன் என்று குடும்பத்துடன் சந்தோசமாக இருக்கும் நாயகியின் மேல் வெறுப்புடன் இருக்க.
அந்த ரீயூனியன் அவர்களுக்கான வாழ்க்கையில் மறு வாய்ப்பு அளித்ததா என்பதைப் பற்றிய கதை. இனிமையான திருப்பத்துடன் கூடிய, காதல் கதை.
கல்லூரி கதையல்லவா நட்புக்கும் குறைவில்லாமல் ஜாலியான கதை.
மின்சார பாவை-1 “நிலா பிக்கப்… பிக்கப்….” என்று முணுமுணுத்தாள் சபரிகா. அவளை சில நொடிகள் சோதித்த பிறகே ஃபோனை எடுத்தாள் வெண்ணிலா. “ஹலோ யார் பேசுறீங்க?” என்ற வெண்ணிலாவின் இனிமையான குரல் ஒலிக்க. “தேங்க் காட்! நிலா! நீ வெண்ணிலா தானே. எப்படி இருக்க? உன் கிட்ட பேசுவேன்னு நினைக்கவே இல்லை. அஞ்சு வருஷமா தேடுறேன்.”என்று படபடத்தாள் சபரிகா. “பரி.” என்று தயக்கத்துடன் அழைத்தாள் வெண்ணிலா. “ எருமை! எருமை! இப்படித்தான் எங்களை எல்லாம் அவாய்ட் பண்ணுவியா. நம்பரைக் கூட மாத்திட்ட.” என்று சபரிகா, தோழியிடம் கோபப்பட....
Loading...
Enjoyed this?
Sign in to clap