
அன்பு(பே)த் தொல்லை
20
7
SERIES•
Ongoing#possessivelovestory
About
எதுவுமே அளவிற்கு மிஞ்சினால் நஞ்சு தான். அது காதலே ஆனாலும் அப்படி தான். அப்படி அளவிற்கு அதிகமான அன்பு எப்படி நம் சங்கமித்ராவை மூச்சுத்திணற வைத்தது, எது அவளை நம் விக்ரமிடம் இருந்து பிரிய வைத்தது, இவர்கள் இப்படியே பிரிந்தே போனார்களா இல்லை சேர்ந்தார்களா என்பதே அன்பு(பே)த் தொல்லை.
"நடந்தது திட்டமிட்ட கொலை என்பது நிரூபிக்கப்பட்டதால் குற்றம் சாட்டப்பட்ட திரு.குமார் அவர்களுக்கு ஈ.பி.கோ செக்ஷன் 302 வின் படி அதிகபட்ச தண்டனை வழங்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் யுவர் ஆனர்." கணீர் குரலுக்குச் சொந்தக்காரியான சங்கமித்ரா தன் வாதத்தை முடித்துக் கொண்டு அமர்ந்தாள். இருபத்தியெட்டு வயது சங்கமித்ரா சட்டத்துறையில் வக்கீலாக காலெடுத்து வைத்து ஐந்து ஆண்டுகள் ஆயிற்று. பெண்களே சற்று பொறாமைப்படும் தோற்றம் தான். கோதுமை நிறம். கூரிய விழிகளில் எதுவும் தப்பாது. நிமிர்ந்து நன்னடையும்...
Loading...
Enjoyed this?
Sign in to clap