
ரணமாய் ஒரு காதல் 💔 | Ranamaai Oru Kaadhal 💔
147
4.2k
SERIES•
Completed#Romance#Mystery#Love#ரணமாய்ஒருகாதல்#RanamaaiOruKaadhal#TamilNovels#RomanticFiction#FamilyDrama#TamilStories#MonicaSathish#MonicaSathishNovels#SuspenseRomance#BestTamilStories#TrendingTamilStories#NewTamilStories2026#EmotionalStories
About
கடமைக்காக ஒன்று சேர்ந்த இரு இதயங்களின் உணர்வுப் போராட்டம்! இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையான வரதனுக்கும், மர்மமான கடந்த காலத்தைக் கொண்ட ரதி மீனாவுக்கும் நடக்கும் திருமணம், காதலாக மாறுமா? துரோகத்தால் காயப்பட்ட வரதனின் மனதை, ரதியின் அன்பும் குழந்தைகளின் மீதான பாசமும் மாற்றுமா? அதே சமயம், ரதியின் மனதில் மறைந்திருக்கும் ஆதி பற்றிய ரகசியம் என்ன? காயங்களை ஆற்றும் காதலா? அல்லது வலிகளை அதிகமாக்கும் மோதலா? படித்துப் பாருங்கள் "ரணமாய் ஒரு காதல்"!
சென்னையில் பிரசத்தி பெற்ற முருகன் கோவில் அது.. அன்று பங்குனி உத்திரம் என்பதால் கூட்டம் அலை மோதியது.. திரும்பும் திசை எல்லாம் முருகனின் அரோகரா கோஷம் தான் செவியை நிறைத்தது.. அந்த கூட்டத்தில் எனக்கென்ன என்பது போல் அவள் அம்மாவின் கைவளைவில் நின்று இருந்தாள் ரதி என்கிற ரதி மீனா.. அவள் யாருக்கு வந்த விருந்தோ என்பது போல் நின்று இருப்பதை கண்ட அவள் அம்மா அமுதா கொதித்து எழுந்துவிட்டார்.. கோவில் என்றும் பாராமல் மகளின் கையை சிவக்கும் அளவிற்கு கிள்ளிவிட அவளோ கொசு கடித்தது போல் கையை தடவி விட்டு அவள் அன்னையை...
Loading...
Enjoyed this?
Sign in to clap