
நெஞ்சில் நீயே நிரந்தரா
22
215
EBOOK•
Completed#போலீஸ் ஹீரோ
About
நெஞ்சில் நீயே நிரந்தரா!! - ஒரு விறுவிறுப்பான கதை களம் , சோதனை எலிகள் (guinea pig) பற்றிய கதை, ஆனால் அது மனிதர்களாக இருந்தால்? மனிதர்கள் சோதனை எலிகலாக இருப்பின், அவர்களின் வாழ்க்கை பற்றி இந்த கதையில் தெரிந்து கொள்ளலாம்.
அது போக நிறைய காதல், நிறைய மோதல் , கொஞ்சம் ரொமான்ஸ் கலந்து , ஒரு முழுமையான போலிஸ் கதை.
மனித மிருகங்கள் கையில்
சோதனை எலியாய் மனிதன்
அந்த மனிதன் விதியை
மாற்றும் மதியாய் -அவன்
சிறுநரிகளின் ஆட்டத்தில்
சிங்கத்தின் வேட்டை!!
நெஞ்சில் நீயே நிரந்தரா அத்தியாயம் – 1 மாலை மயங்கும் வேளை சூரியன் கடலுக்குள் மெல்ல மூழ்கி கொண்டிருக்க, அந்த இருளும் ஒளியும் கலந்த பொன் அந்தி நேரம். மும்பை மாநகரத்தில் இருந்து ஐந்து கிலோமீட்டர் கிழக்கு திசையில் எட்டு கிலோமீட்டர் நீளமும் எட்டு கிலோமீட்டர் அகலமும் கொண்ட ஒரு சிறு தீவு டிராம்பே. அதன் கடற்கரையில் பத்து சிறுவர்கள் கூடி நின்று ஒன்று போல் கையில் இருக்கும் கடிகாரத்தை பார்ப்பதும் கடலை ஒரு முறை பார்ப்பதும் என்று கிசுகிசுத்துக் கொண்டிருந்தனர். அதேநேரம் கையில் ஒரு வெள்ளை காகிதத்துடன், “ பாய்...
Loading...
Enjoyed this?
Sign in to clap