
அந்த வானம் எந்தன் வசம்
12
55
EBOOK•
Completed
About
திருமணத்திற்குப் பின்னான ஏற்படும் காதல் கதை. திருமணத்தில் நாட்டமில்லாத நிவேதிதா குடும்ப சூழல் காரணமாக அருள்மொழி வர்மனை திருமணம் செய்து கொள்கிறாள். பொறுப்பில்லாத கணவனிடமிருந்து விவாகரத்து பெறுகிறாள். அதற்குப் பிறகு அவள் அருளை சந்தித்தாளா? அவன் இப்போது எப்படி இருக்கிறான்? மீண்டும் இருவரும் இணைவார்கள? படித்து விமர்சிக்கவும்.
அந்த வானம் எந்தன் வசம்
1
சித்திரை மாதத்தின் உக்கிரமான வெயில், அந்த மாலை நாலரை மணி வேளையிலும் மண்டையை பிளந்தது. இட்டிலி சட்டிக்குள் வைத்து அவித்தது போல ஒரே கசகசப்பு. ஒரே உப்புசமாக இருந்தது. அது நேரம் வரை ஏசி யில் இருந்து விட்டு வெளியே வரவும் வெப்பத்தின் வீச்சு அதிகமாக இருந்தது நிவேதிதாவுக்கு. வெயிலுக்கு மேனி கருத்து விடாமல் இருக்க கண்களை தவிர மீதி உடல் முழுவதும் துப்பட்டாவால் மூடி சகல பந்தோபஸ்தும் செய்து கொண்டு வந்து அவளுடைய வண்டியை வெளியே எடுத்தாள்.
சோளிங்கநல்லூர் சிக்னலை கடக்க அரை மணி நேரம் ஆய
...Loading...
Enjoyed this?
Sign in to clap