
உயிரே உயிர்த்தேன் உன்னாலே!
67
423
EBOOK•
Completed#உயிரே#உயிரே உயிர்த்தேன் உன்னாலே#love
About
திருமணம் என்ற வார்த்தையில் வெறுப்பு கொள்ளும் நாயகி. விடிவெள்ளியாக தோன்றிய நாயகன் அவளுடைய வாழ்க்கையில் மீண்டும் காதலை மலரச்செயகிறான். திருமண பந்தத்தில் இணைந்த இந்த இளம் தம்பதியரின் இன்பமான வாழ்வில் விதி தன்னுடைய சதுரங்க ஆட்டத்தை துவங்கியது. இந்த ஆட்டத்தில் நாயகி தன்னுடைய சுயத்தை இழக்கிறாள். பிரிந்த இவர்கள் மீண்டும் ஒன்றுசேர்வார்களா? வாசியுங்கள் உயிரே உயிர்த்தேன் உன்னாலே!
1 அன்று கோகுலாஷ்டமி. கிருஷ்ணர் கோவில் முழுவதும் பூக்களாலும் வண்ண விளக்குகளாலும் வெண்ணெய் பானைகளாலும் அலங்கரிக்கப் பட்டிருந்தன. எங்கு பார்த்தாலும் பலவிதமான கோலங்கள் கோலப் பொடியாலும், மலர்களாலும் போடப்பட்டிருந்தன. அப்போது அங்குள்ள ஒரு பூகோலத்தை பெண் ஒருத்தி அலங்கரித்துக் கொண்டிருந்தாள். அவளுடைய கருமையான நீண்ட கூந்தல் பின்னலிடப்பட்டு இருக்க முகத்தருகே இருக்கும் சுருள் கேசங்கள் காற்றில் லேசாகப் பறந்து அவளது முகத்தை மறைத்துக் கொண்டிருந்தது. அவளுடைய அளவான மை தீட்டப்பட்ட கண்கள் அனைவரும் ரசிக்கும்...
Loading...
Enjoyed this?
Sign in to clap