
அஞ்சுகமே நீ அஞ்சுதல் ஏனோ
61
614
EBOOK•
Completed
About
தனக்கு நிச்சயமான பெண் பைங்கிளியை காதலோடு பார்க்கும் கண்ணபிரான், தன்னுடைய வருங்கால கணவன் கண்ணபிரானை எதிரியைப் போல் பாவிக்கும் பைங்கிளி என காதல் வெறுப்பு என்ற இரண்டு துருவங்களில் நிற்கும் நாயகனும் நாயகியும் எப்படி ஒருவருக்கொருவர் இலகுவான மனநிலைக்குள் வருகிறார்கள் என்று சொல்வது தான் இந்தக் கதையின் கரு.
அஞ்சுகமே நீ அஞ்சுதல் ஏனோ வைஷு அய்யம் 1 அமராவதி ஆற்றின் அருகில் அமைந்த வஞ்சி மாநகரம்..... கருவூர் என்று முன்பு மக்களால் அழைக்கப்பட்ட கரூர் நகரின் முக்கியமான ஒரு ஏரியாவில் ஐம்பது ஆண்டுகள் பழமையான ஆனாலும் தன்னுடைய பிரபலம் இன்னும் மாறாத ராஜன் திரையரங்கத்தில் அன்றைய தினம் ஒரு ஐயப்ப பூஜை நடைபெற்றுக் கொண்டிருந்தது. தியேட்டரின் மெயின் கேட்டிற்கும், பத்து அடி தள்ளி படிகளில் ஏறும் இடத்திற்கும் நடுப்புறமாக பெரிய ஷாமியானா பந்தல் போடப்பட்டு அதில் நடுநாயகமாக ஐயப்பன் வெண்கல விக்ரஹமாக அமர்ந்திருந்தார். பூ...
Loading...
Enjoyed this?
Sign in to clap