
வஞ்சி மனம் தஞ்சம் கொண்டேன்
45
155
EBOOK•
Completed
About
சிவமித்ரன் என்ற ஒரு மென்மையான கறார் பேர்வழி நாயகனுக்கும் ஐஸ்வர்யா ஸ்ரீ என்ற ஒரு இளம் சேட்டைக்கார சாப்பாட்டு பிரியையான நாயகிக்கும் இடையே நடக்கும் அறிமுகம் நட்பு மோதல் காதல் காதலுக்கு பிறகு அவர்களுடைய வாழ்க்கை என்ற பல பரிமாணங்களில் நகரப் போவது தான் இந்தக் கதை.
வஞ்சி மனம் தஞ்சம் கொண்டேன் வைஷு அய்யம் அத்தியாயம் 1 அதிகாலை ஐந்து மணியளவில் மித்ரனின் அலைபேசி மெல்லிசை எழுப்பி அவன் உறக்கத்தை கலைக்க எத்தனித்த போது அவன் அதற்குள் எழுந்து அதை அணைத்து விட்டு சோம்பல் முறித்தான். அலாரம் எல்லாம் ஒரு கடமைக்காக வைப்பது தான். எப்போதும் சிவாவின் ஆழ் மனதில் அவன் எப்போது விழிக்க வேண்டும் என்று நினைக்கிறானோ, அந்த நேரத்தை நினைத்து அப்போது நான் எழ வேண்டும் என்று ஒரு முறை சிந்திப்பான். அவ்வளவே! அலாரத்தை அது அடிக்கும் முன்னதாகவே அவனுடைய கைகள் எப்போதும் அணைத்துவிட்டு தான்...
Loading...
Enjoyed this?
Sign in to clap