
தீராதது!! காதல் தீராதது!!
20
588
EBOOK•
Completed#Love #Romance #Father-daughter bonding
About
மயூரவாஹனன் - முருகன்
தேம்பாவணி - பூமாலை
முருகனின் தோள் சேரும் பூமாலை.
ஊரெல்லாம் வட்டிக்கு விடுவது, கட்டப்பஞ்சாயத்து செய்வது என வாழும் வட்டி (மயூரவாஹனனு)க்கும்,
இரு குழந்தைகளின் அன்னையாய், எந்த வம்புக்கும் போகாமல். தன் குழந்தைகளுக்காக வாழும் பாவணியும். வாழ்க்கையில் எவ்வாறு இணைகிறார்கள்?.
தேம்பாவணியுடன் வாழ ஆரம்பிக்க பொழுது தான்.. வட்டி மிகப்பெரிய உண்மையை உணர்கிறான்?. அந்த உண்மை என்ன?.
தீராதது!! காதல் தீராதது!! மதுஷா அத்தியாயம் 1 ப்ரௌசிங் சென்டரில் இருந்து இரண்டு தெரு தள்ளியிருக்கும் இரும்பு குடோனுக்கு நடந்துச் சென்றுக் கொண்டிருந்தாள் தேம்பாவணி... ஐந்தரையடி உயரம்...வெளுப்பும் அல்லாது கறுப்பும் அல்லாது இரண்டும் கலந்த மாநிறம்... சற்று கூர்மையான நாசி, சிற்பி செதுக்கி வைத்தாற் போன்று செப்பு உதடுகளும்... பிறை போன்ற நெற்றி அதில் கருப்பு வண்ண பொட்டு, அவளை பார்த்தாலே மேலும் மேலும் பார்ப்பதற்கு தூண்டும் வகையான அழகி... வேகமாக நடந்துக் கொண்டிருந்தவளின் போன் அடிக்கும் சத்தத்தில்...
Loading...
Enjoyed this?
Sign in to clap