
சிங்கப்பெண்ணே ❤️ (தாயின் போராட்டம்)
12
68
SERIES•
OngoingNovella championship May 2026#Love#Family#Mother love
About
சிறு வயதில் தாய், தந்தை இருவரையும் இழந்து உறவினர்களின் கொடுமையான சித்ரவதையில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாயகி அருந்ததி.. பல பெண்களோடு தொடர்பு வைத்து கொண்டு
அவளின் வாழ்க்கைக்குள் நல்லவனை போல் நுழைந்த அசோகன் அவளை நம்ப வைத்து திருமணம் செய்து கொண்டான்.. அருந்ததிக்கு அவனது சுயரூபம் தெரிந்ததும் அவளுக்கு விபச்சாரி பட்டம் கட்டி வீட்டில் இருந்து துரத்துகிறான்.. தனது இரு பிள்ளைகளையும் அவள் எவ்வாறு போராடி வளர்க்கிறாள் என்பதே பற்றிய கதையே சிங்கப்பெண்ணே (தாயின் போராட்டம்) கதை..
சூரியன் தனது கடமையை முடித்து விட்டு செல்லும் அந்தி வானமான மாலை வேளையில் சென்னையின் மையபகுதியில் இருந்த ஒரு பெரிய வீட்டின் நடுக்கூடத்தில் கண்கள் கலங்கி கண்ணீர் வழிய எதிரில் அரை குறை ஆடையுடன் தலை மூடி கலைந்து கூடலில் ஏற்பட்ட காயங்களுடன் நின்றிருந்த பெண்ணை அணைத்து கொண்டு மேல் சட்டை எதுவுமின்றி உடலில் மார்பு மற்றும் தோள் பட்டையில் இருந்த நகக்கீறலுடன் அறையில் நடந்த கேவலத்தை உறுதிபடுத்தும் ரீதியாக தெனாவட்டாக நின்றிருந்த தனது கணவனை வெறித்து பார்த்து கொண்டிருந்தாள் அருந்ததி.. சில நிமிடங்களுக்கு முன்பு...
Loading...
Enjoyed this?
Sign in to clap