
உனக்காக விழித்திருப்பேன் நிலவாக
25
344
EBOOK•
Completed
About
தன் தமக்கையின் மரணத்திற்கு காரணமான நாயகியின் தந்தையை பழி வாங்க துடிக்கும் நாயகனும், அவனின் குடும்பத்தாரும்,.... இவர்களின் பழி தீர்க்கும் படலம் நிறைவேறியதா? பழி வாங்கும் படலத்தின் போது நாயகியின் மீது காதல் கொள்ளும் நாயகன், சின்ன வயதிலிருந்து அன்புக்காக ஏங்கி போயிருந்த நாயகிக்கு அன்பும் அரவணைப்பும் நாயகனின் மூலம் கிடைக்கிறது, நாயகியும் அவன்பால் காதல் கொள்கிறாள், தன் மகளின் மரணத்திற்கு காரணமானவனின் மகளை தன் வீட்டு மருமகளாக ஏற்றுக்கொள்வாரா நாயகனின் தந்தை? நாயகன் மற்றும் நாயகியின் காதல் கைக்கூடியதா?
உனக்காக விழித்திருப்பேன் நிலவாக
பகுதி 1
வானம் கருமேகங்களை திரட்டி நான் எப்பொழுது வேண்டுமானாலும் கனத்த மழையை பொழிந்து விடுவேன் என்று தன்னை மிரட்டுவது போல் இருந்தது ஆருத்ராவிற்கு,... தன் பிரவுசிங் கோச்சிங் சென்டரின் வாயிலிலேயே தன்னந்தனியாக நின்றாள் ஆருத்ரா, இரவு எட்டு மணி தான் என்றாலும் அன்று ஏனோ மயான அமைதி நிலவியது, மேகமும் காற்றை தன்னோடு சேர்த்து தன்னை பலப்படுத்தி அசுர வேகத்தில் வீசிக் கொண்டிருந்தது, இப்பொழுது ஆருத்ராவிற்கு பயம் வர ஆரம்பித்தது, சற்று நொடிகளில் தன்னை சமன்செய்து கொண்டவள்,...'மழை வ
...Loading...
Enjoyed this?
Sign in to clap