
அமுதம் பொழியும்! குமுதம் மலரும்!
21
205
EBOOK•
Completed
About
வாசகத் தோழமைகளுக்கு,வணக்கம்!
அமுதம் பொழியும்! குமுதம் மலரும்!
கிராமத்துப் பின்புலம் கொண்ட இந்தக் கதையில் வரும் அமுதன், குமுதா, மரகதம், வேதவல்லி அனைவரும் நிச்சயமாக உங்கள் மனம் கவர்வார்கள்.
என்றும் உங்கள் ஆதரவுக் கரம் எனை நோக்கி நீளும் என்று நம்புகிறேன்.
நன்றி!
வணக்கம்!
என்றும் உங்கள் ஆதரவை எதிர்நோக்கும்
தூரிகா சரவணன்
அமுதம் பொழியும்! குமுதம் மலரும்!
அத்தியாயம் 1
“அங்காளம்மா எங்கள் செங்காளம்மா
மங்கலம் பொங்கிட மனதினில் வந்திடும் மாரியம்மா! கருமாரியம்மா!”
என்று அந்த அதிகாலை வேளையில் ஒலிப்பெருக்கியின் வாயிலாக எல்ஆர் ஈஸ்வரி பக்திப் பெருக்கில் உச்சஸ்தாயியில் அலறிக் கொண்டிருந்தார்.
பாடல் போட ஆரம்பிப்பதற்கு முன்பாகவே விழித்தெழுந்து தன் படுக்கையில் அமர்ந்த நிலையிலேயே உள்ளங்கைகளை விரித்து சில வினாடிகள் பார்வையிட்டவன் பின் அந்தக் கைகளாலேயே முகத்தைத் துடைத்து முடிக்க அந்த நேரம் ஒலிக்க ஆரம்பித்த பாடலின் சத்தத்தில் முகம் கடுத
...Loading...
Enjoyed this?
Sign in to clap