
நெஞ்சை வலி தீர்க்கும் மருந்தாளா!
60
166
EBOOK•
Completed
About
பள்ளி தோழியான நாயகியை பார்த்ததும் இதய நிபுணரான நாயகனுக்கு கண்டதும் காதல்..
ஆனால் அவள் விவகரத்தான தாய் என்பதால் பெற்றோர்கள் சம்மதிக்க மாட்டார்கள் என்று தன் காதலை மறைக்கிறான்..
நாயகிக்கும் பள்ளிக்காலத்தில் தன் மீது காதலிருந்தது நாயகன் அறியாத ஒன்று..
இதயநோயாளியான நாயகியின் மகன் அவனோடு நெருக்கமாக, காதலை சொல்லவும் மெல்லவும் முடியாமல் தவிக்கிறான்..
இறுதியில் என்ன நேர்ந்தது? என்பதை பல அதிரடி திருப்பங்களுடன் கூறும் கதை.
நெஞ்சை வலி தீர்க்கும் மருந்தாளா! அத்தியாயம் 1 நீண்ட வராண்டாவில் தன் இரு பக்கமும் பார்வையைப் பதித்தவாறு, முகத்தில் என்றும் இருக்கும் மென் புன்னகையுடன், கழுத்தில் ஸ்டெதஸ்கோப் சகிதம் வலம் வந்தான் டாக்டர் துஷ்யந்த். முப்பது வயது விஷேட இளம் இதயநோய் நிபுணர். ஆறடி உயரம், ஆஜானுபாகுவான தோற்றம், முறுக்கேறிய புஜங்கள், எந்தக் கெட்ட பழக்கமும் இல்லை என அடித்துக் கூறும் அழுத்தமான இளஞ்சிவப்பு இதழ்கள், ட்ரிம் செய்யப்பட்ட தாடி, மீசை, பாதி நெற்றியை மறைத்திருந்த முடியை ஜெல் பூசி கட்டுக்குள் வைத்திருந்தவனின் மீது...
Loading...
Enjoyed this?
Sign in to clap