
சீதையின் ராவணன்
21
128
EBOOK•
Completed
About
ஒரு தாலியின் பின்னால் மறைந்த உண்மை…
ஒரு குழந்தையின் சிரிப்பில் பிறந்த புதிய வாழ்க்கை…
“ஒரு குழந்தைக்கு அம்மாவாக மட்டும் இருக்க முடியுமா?” என்ற ஒரு கேள்வி, பார்கவியின் வாழ்க்கையை மாற்றியது.
அன்பில்லா உறவு… அர்த்தமில்லா உறுதி…
ஆனால் அந்த இருளில் அவள் தன்னை மீண்டும் கண்டாளா?
இது ஒரு மனைவியின் கதை அல்ல…
ஒரு உயிர் பிழைத்த பெண்ணின் கதை.
சீதையின் ராவணன் அத்தியாயம் 1 "கெட்டி மேளம். கெட்டி மேளம்."என நாதஸ்வரங்கள் முழங்க மங்களநாணை பார்கவியின் கழுத்தில் அணிவித்து தனது மனைவியாக ஏற்றுக் கொண்டான் வசந்த். "க்கும். இவளுக்கு வந்த வாழ்வை பார்த்தியா? நம்ம கூட தான் வேலை செஞ்சா. ஆனா இப்போ வசந்த் சாரை கட்டிக்கிட்டு இந்த மில்லுக்கே ஓனராயிட்டா." "புடிச்சாலும் புடிச்சா. நல்ல புளியங்கொம்பா பார்த்து புடிச்சுருக்கா!" "ஆமா அகிலம்! இல்லைன்னா ஒரு குழந்தைக்கு தகப்பனா இருக்குறவனைப் போய் கட்டிக்குவாளா?" "எல்லாம் சொத்துபத்து அதிகம் இருக்குன்னுதே...
Loading...
Enjoyed this?
Sign in to clap