
இன்றென் காதலே
0
0
SERIES•
காற்றில் விரவியிருந்த பனியால் பகல் பொழுதுக்கான வெக்கையின் சுவடு கொஞ்சம் கூட இல்லாமல் போனதால் இளந்தென்றல் திறந்திருந்த ஜன்னலின் வழியே வீட்டினுள் நுழைந்து தன் குளிர் கரத்தால் அனைத்தையும் தீண்டியது. அதிலிருந்த குளிர்ச்சி நீள் இருக்கையில் உடலைக் குறுக்கி வளைத்துப் படுத்திருந்தவளின் பாதத்தையும் தொட்டதில் லேசாக விழிப்பு வந்துவிட்டது.
“ம்மா...” என முணுமுணுத்த இதழ்கள் உலர்ந்து போயிருந்ததால் உண்டான எரிச்சலை மட்டுப்படுத்த ஈர நாவால் அதை வருடிவிட்டு மீண்டும் “ம்மா...” என அழைத்த சாரலெழிலிக்கு பதிலேதும்
...Loading...
Enjoyed this?
Sign in to clap