
உன்னில் உறைகின்றேன்
21
100
EBOOK•
Completed
About
கடந்த காலக் கசப்புகளால் பிரிந்த ஒரு தம்பதி, மீண்டும் ஒரு தற்செயலான சந்திப்பில் இணைவதே இக்கதை. தனி ஒருத்தியாகத் தன் மகனை வளர்க்கும் வானதி, திடீரெனத் தன் முன்னாள் கணவன் சஞ்சய் சக்ரவர்த்தியை சந்திக்கிறாள்.
மனக்கசப்புகள் மறைந்து, தவறுகள் திருத்தப்பட்டு, பிளவுபட்ட இதயங்கள் மீண்டும் ஒன்று சேருமா? காதலும், பாசமும் கலந்த ஒரு அழகான உணர்வுப் போராட்டம் இது.
வாசிக்கத் தவறாதீர்கள்!
அத்தியாயம் - 1
"இங்கப்பாரு வானதி. இதை முடிச்சு கொடுத்துட்டு தான் கிளம்பனும்னு பிரின்சிபல் சார் சொல்லிருக்காங்க. எனக்கு எதுவும் தெரியாது."
"அய்யோ! மேம் வீட்டுல என் பையன் மட்டும் தனியா இருப்பான். ப்ளீஸ்.. இப்ப நான் வீட்டுக்கு போயிட்டு நாளைக்கு காலைல சீக்கிரமே வந்து வேலைய முடிச்சுடுறேன்."
"என்கிட்ட சொல்லாத. பிரின்சிபல் சார்கிட்ட போய் சொல்லு."
தன்னுடன் வேலைப்பார்க்கும் ஹெச்ஓடி கலைவாணி கூறவும் ஒரு பெருமூச்சுடன் எழுந்து பிரின்சிபால் அறையை நோக்கிச் சென்றாள்.
"எக்ஸ்க்யூஸ் மீ சார். மே ஐ கம்மின்."
"எஸ் கம்பி
Loading...
Enjoyed this?
Sign in to clap