Skip to content
அழகியின் அரக்கனவன்

அழகியின் அரக்கனவன்

20
56
EBOOK
Completed
Vinishasri
Vinishasri

About

அவன் தனது பகையைத் தீர்த்துக்கொள்ள அவளை வலுக்கட்டாயமாகக் சிறை பிடித்திருக்கிறான் என்பதை அவளால் ஒவ்வொரு விநாடியும் உணர முடியும் அளவிற்கு அவனின் தண்டனை இருந்தது .அவன் தன்னை பழிவாங்கும் நோக்கத்தோடு தன் கழுத்தில் தாலி கட்டி இருக்கிறான் சிறை கைதியாக …ஆனால் இது எல்லாம் எதற்காக ..? ஏன் இந்த பழிவாங்கல் அப்படி நான் என்ன செய்தேன்? என்று அவள் மனதிற்குள் மருகிக் கொண்டு புலுங்கிக் கொண்டிருந்தாள்.மேலும் தெரிந்து கொள்ள வாசியுங்கள் அழகியின் அரக்கனவன்(முழு நாவல்)…
அழகியின் அரக்கனவன் அத்தியாயம் : 1 அன்று, அந்த வானுயர்ந்த மாளிகை பவித்ராவுக்கு சிறை போலத் தெரிந்தது. சுவர்கள் முழுவதும் விலை உயர்ந்த ஓவியங்கள்; தரை முழுவதும் பளிங்கு கற்கள்; பிரம்மாண்டமான கூரையில் இருந்து தொங்கிய பெரிய சரவிளக்குகள்... பூக்களால் அலங்கரிக்கப்பட்ட அவை யாவும் பவித்ராவிற்கு நறுமணம் தரவில்லை மாறாக அந்தப் பூக்களில் கூட ஏதாவது சூழ்ச்சிகள் இருக்குமா என்ற பயத்தை தான் தந்தது… எவ்வளவுதான் அழகாக அந்த இடம் இருந்தாலும் இவையாவும் அவளுக்கு நிம்மதியைத் தரவில்லை. அவை அவளது துயரத்தின் நிமித்தம் போல...
Loading...

Enjoyed this?

Sign in to clap