Skip to content
உனது காதலில் கரைந்தேனடி

உனது காதலில் கரைந்தேனடி

0
0
EBOOK
#RomanticStory
Thulasi Raj
Thulasi Raj

உனது காதலில் கரைந்தேனடி

துளசி ராஜ்

அத்தியாயம் 1

சென்னை.. கிழக்கு வானில் உதயமான ஆதவன் தன் கதிர்களைப் புவியில் அழுத்தமாகப் படரச் செய்தான். சூரியக் கதிர்கள் படர்ந்ததும் பனி தானாக விலகிச் செல்ல, மலர்கள் மெல்ல மலரத் தொடங்கியது.

விடியற் காலையில் எழுந்து விட்ட உமையாள் முதலில் தன் கூந்தலை அள்ளி எடுத்து கொண்டை இட்டு கொண்டவள் வாசலுக்குச் சென்று அவ்விடத்தை பெருக்கி தண்ணீர் தெளித்து அழகான வண்ணக் கோலம் ஒன்றைப் போட்டாள்.

பின்பு வீட்டிற்கு முன்பக்கமாக அமைக்கப்பட்டு இருந்த சிறியப் பூந்தோட்டத்தைக் கண்டவளின் முகம

...
Loading...

Enjoyed this?

Sign in to clap