
நாணலே நாணமேனடி? | Naanale Naanamenadi?
0
50
SERIES•
Ongoing#Aftermarriage#Secondmarriage#Motherhood
About
தந்தையை இழந்ததிலிருந்து குடும்பச் சுமையை ஏற்று தங்கையரைப் பராமரித்து வருபவளை இயக்கும் ஒரே ஆதாரசுருதி, நோயுற்றிருக்கும் அவளது தாய்! அவரது துயர் நீக்கும் பொருட்டும், தங்கையின் திருமணம் தன்னால் தள்ளிப் போகக்கூடாதே என்ற எண்ணத்துடனும் திருமண வாழ்வில் காலடி எடுத்து வைக்கும் நாயகி!
ஒரு பெண் குழந்தைக்கு தந்தையாகி, விதி வசத்தால் மனைவியைப் பறிகொடுத்த நிலையில் அவளின் கரம் பற்றும் நாயகன்!
திருமணத்தின் பின்னரான அவர்களது வாழ்வில் புயல் வீசுமா? அல்லது தென்றல் வீசுமா என்பதுவே கதை.
மூடுபனி படர்ந்த இளங்காலைப் பொழுதில், நடைப்பயிற்சியை முடித்துக் கொண்டு நேரகாலத்துடனே வீட்டினுள் நுழைந்தான் யதுநந்தன். கூடத்தில் போடப்பட்டிருந்த சோபாவில் அமர்ந்து, ஆங்கிலப் பத்திரிகையைக் கண்ணாடியின் உபயோகமின்றி புரட்டிக் கொண்டிருந்தவரை கண்டும் காணாத பாவனையில், வேக நடையிட்டு அறையை நோக்கி நடந்தவனை, "நந்தா!" என அழைத்து நிறுத்தினார், கிருஷ்ணமூர்த்தி. "ப்ச்!" என வெளிப்படையாகவே சலித்துக் கொண்டவனுக்கு, 'இவரிடம் பேச்சுக் கொடுத்து, இன்றைக்கும், காலையிலேயே என் மனநிலையை கெடுத்துக் கொள்ள வேண்டுமா?' என்ற...
Loading...
Enjoyed this?
Sign in to clap