
எனக்காக வந்தவனே
7
56
EBOOK•
Completed#Feel good#love#sweet#wholesome#novel#goodread#tamilnovel#enakkaka vandhavane#opposite attracts
About
வனபத்ரா - தன் பெயரில் இருக்கும் 'வன'த்திற்கு எந்த விதத்திலும் தொடர்பில்லாத, மனிதர்களைத் தவிர வேறு எந்த உயிரினமோ அந்த உயிரினங்களுடன் நெருங்கிப் பழகுபவர்களோ அருகில் வந்தாலே அரிய வகை உயிரினம். அவளுக்கு வாழ்க்கைத்துணையாக யார் வந்தால் நன்றாக இருக்கும்? இதமானதொரு காதல் கதை.
"அக்கா... பச்சைல ரெண்டு அரைலிட்டர்... தயிர் இருக்காக்கா?" வனபத்ரா கூடையை நீட்ட, "இருக்குப்பா..." என்றபடி அந்தக் கடைக்காரர் பால் அடைக்கப்பட்ட நெகிழிப்பைகளை அதில் போட்டார். "ஒரு தயிரும் கொடுத்துருங்கக்கா..." என்றபடி பணத்தை அவரிடம் நீட்டியவள், ஏதோ உறுத்த, காலருகே பார்த்தாள். ஒருகணம் மூச்சு மூக்குக்குள்ளேயே நின்றுவிட, திரும்பி ஓடத் தொடங்கியிருந்தாள். சில்லறையை எடுத்துவிட்டுத் தயிரோடு வந்த கடைக்காரர் இவளைக் காணாமல் பார்க்க, அவள் தன் வீட்டுக்கு எதிர் திசையில் ஓடிக்கொண்டிருந்தாள். அவளுக்குப் பின்னால்,...
Loading...
Enjoyed this?
Sign in to clap